Wednesday, April 22, 2009

கோனார்க் சூரியக் கோயில்









இந்துக்கள் சூரியனை தெய்வமாக வழிபடுகின்றனர். சூரியனுக்காக மாபெரும் கோயில் ஒன்று ஒரிசா மாநிலத்தில் கோனார்க் என்ற இடத்தில் கங்கை ஆற்றுப்படுக்கையில் அமைந்துள்ளது.

இதனைக் கோயில் என்ற முறையில் மட்டும் அல்லாமல் கட்டடக் கலையின், சிற்பக் கலையின் சுரங்கமாகவும் காணலாம்.

இவ்விடத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்திய சுற்றுலாப் பயணிகளை விட மிக அதிகம் என்பது உண்மை.

பூரிக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த கோனார்க் சூரியக் கோயில் கடந்த காலங்களில் பராமரிப்பின்றியும், கடல் அலைகளின் சீற்றத்தாலும் பெருமளவு சிதிலமடைந்துவிட்டது.
எனினும் மீதமிருப்பவற்றை மட்டும் காண ஒரு நாளும், இரண்டு கண்களும் போதாது. அவ்வளவு அற்புதமான கலை நயம் மிளிர்கிறது.


இந்த கோயில், முதலாம் நரசிம்ம தேவனால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று வரலாறுக் கூறுகிறது.

இந்த கோயிலின் அமைப்பைப் பார்த்தால் நாம் வியந்து போவோம்... அந்த காலத்திலேயே இப்படி ஒரு கட்டட அமைப்பா என்று. கோயிலுக்குள் எங்கும் தூண்கள் காணப்படவில்லை. அதுபற்றி கேட்டதற்கு, ஒவ்வொரு கற்களுக்கும் நடுவில் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இணைத்து கட்டியுள்ளனர்.
ஏழு குதிரைகள் பூட்டி 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருளுவது போல் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 குதிரைகள் என்பது 7 நாட்களும், 24 சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தையும் குறிக்கும் விதத்தில் இந்த கோயிலின் அமைப்பு உள்ளது. இந்த கோயிலின் கோபுரம் சரியத் துவங்கியதால் சூரியநாரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு தற்போது பூரியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த கோயிலுக்கு வரும் மூன்று தலைமுறைக்கும் தனித்தனியான சிற்பங்கள் உள்ளன. அதாவது பேரன் பேத்திகளுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிக குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.தாய், தந்தைக்காக ஊடல், கூடல், ஆடல் போன்றவையும், தாத்தா பாட்டிக்கு என ஆன்மீகச் சிற்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த கோயிலைப் பற்றி நிறையச் செய்திகள் சொல்லப்படுகிறது. இவை எல்லாம் பார்க்க முடிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.


அதாவது, கோயிலில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து அதன் அமைப்பு இருந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு 4 மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி சூரியநார் சிலை மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாழிகை, நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் வகையில் இதன் அமைப்பு இருந்துள்ளது.

பெரும்பாலும் சிதிலமடைந்து, தன் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கும் இந்த கோயிலை இந்த நிலையிலேயாவது நிலைநிறுத்தி எதிர்கால சந்ததிகளுக்கு காட்டும் வகையில், உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்து பராமரித்து வருகிறது யுனெஸ்கோ.

கோனார்க் சூரியக் கோயிலைக் காணச் செல்வது என்று முடிவெடுத்துவிட்டால் குறைந்தபட்சம் ஒரு நாள் முழுவதையும் அங்கேயே கழிக்கும் வகையில் திட்டமிட்டுச் செல்லுங்கள்.





அங்குள்ள நல்ல வழிகாட்டி ஒருவரை கட்டாயம் உடன் அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கோனார்க் கோயிலில் புதைந்து கிடக்கும் அரிய கலைகள் பற்றி அவர்கள் எடுத்துரைப்பார்கள்.

இ‌ந்த பார‌ம்ப‌ரிய இட‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்லவத‌ற்கு நுழைவு‌க் க‌ட்டண‌ம் வசூ‌லி‌க்‌க‌ப்படு‌கிறது. அதாவது இ‌ந்‌திய‌ர்க‌ள் ம‌ற்று‌ம் சா‌ர்‌க் உறு‌ப்‌பு நா‌டுகளை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்களு‌க்கு ரூ.10 க‌ட்டண‌ம். ம‌ற்ற நா‌ட்டவ‌ர்களு‌க்கு ரூ.250 க‌ட்டணமாக வசூ‌லி‌க்க‌ப்படு‌கிறது. 15 வயது‌க்கு‌ட்ப‌ட்ட ‌சிறுவ‌ர்களு‌க்கு க‌ட்டண‌மி‌ல்லை.

எப்படிச் செல்வது?

சாலை மார்கம் : ஒரிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் கோனார்க்கை இணைக்கின்றன. பூரி, புவனேஸ்வர், பிப்லி போன்ற பல நகரங்களில் இருந்து பேருந்துகள் மூலமாகவோ, சொந்த வாகனம் மூலமாகவோ கோனார்க் செல்லலாம்.

ரயில் மார்கம் : பூரி ரயில் நிலையத்தில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் இருந்து 64 கி.மீ. தொலைவிலும் கோனார்க் உள்ளது.

விமான மார்கம் : புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து 64 கி.மீ. தொலைவில் கோனார்க் உள்ளது. சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கட்டா, நாக்பூர் விமான நிலையங்களில் இருந்து புவனேஸ்வருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Tuesday, November 11, 2008

Personalities

Personalities





1. Arasan Shanmukhanar - A great Tamil poet.


2. L A Samy Iyer - Former collector of Madurai District, British Raj.


3. Sethurathnam Iyer - A Minister of Madaras Presidency, British Raj.


4. Vaidya Subramania Iyer - A reputed Philonthrapist


5. T R Mahalingam - A great Singer/Actor of 1960s







Subramaniam Swamy - Present Leader of Janatha Party

Distance from city Sholavandan

Distance from city Sholavandan to 20 biggest cities of country: India
Distance (Km)
Sholavandan - Bombay 1 140 km
Sholavandan - Delhi 2 076 km
Sholavandan - Bangalore 333 km
Sholavandan - Calcutta 1 782 km
Sholavandan - Madras 424 km
Sholavandan - Ahmadabad 1 556 km
Sholavandan - Hyderabad 820 km
Sholavandan - Pune 1 045 km
Sholavandan - Surat 1 333 km
Sholavandan - Kanpur 1 847 km
Sholavandan - Jaipur 1 893 km
Sholavandan - Lakhnau 1 898 km
Sholavandan - Nagpur 1 244 km
Sholavandan - Indore 1 431 km
Sholavandan - Patna 1 890 km
Sholavandan - Bhopal 1 475 km
Sholavandan - New Patna 1 890 km
Sholavandan - Ludhiana 2 333 km
Sholavandan - Thana 1 154 km
Sholavandan - Agra 1 909 km

Distance from city: Sholavandan to Top 10 cities of the world
Distance (Km)
Sholavandan - Prague 7 311 km
Sholavandan - Berlin 7 432 km
Sholavandan - London 8 305 km
Sholavandan - Los Angeles 14 842 km
Sholavandan - Moscow 6 153 km
Sholavandan - New York 13 753 km
Sholavandan - Paris 8 142 km
Sholavandan - Peking 4 959 km
Sholavandan - Rio De Janeiro 13 608 km
Sholavandan - Sydney 9 075 km
Sholavandan - Tokyo 6 744 km

Saturday, December 22, 2007

கல்வி


என்னுடய ஆரம்பகல்வி சி.எஸ்.ஐ. பள்ளியில் ஐந்து வருடம் வெட்டியா போச்சு அவ்வளவு நல்ல பள்ளி .இன்னும் எவ்வளவு பேர் வாழ்கையில் விளையாட போரார்களோ பாவம் என்னை போன்ற குழைந்தைகள்
அ டுத்து ஆர்.சி.நடுநிலைப்பள்ளி அங்கு ஒரு ஆசிரியை மண்டையை உடைத்து எங்கள் குலத்தொழில் விவசாயத்துக்கு அனுப்பிவைத்தார்
என் தந்தை இவ்வுலகை அங்கு தான் எனக்கு போதித்தார் .அவர் தான் எனக்கு உண்மையான ஆசிரியர் .உழைப்பு ,விடாமுயற்சி ,பொருளாதாரம் ,ஆரசியல் அனைத்து துறை ஆறிவும் கற்பித்தார் .கல்வி மீது இடுபாடு வந்தது
கல்வியின் மகத்துவம் உணர்ந்து நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆர்.சி.நாடுநிளைப்பள்ளி சென்றேன் .
இந்ததடவை என் இதயதெய்வம் மெட்ராஸ் டீச்சர் என்று அழைக்கப்படும் பாத்திமா லூர்துசாமி அவர்கள் ஆசிரியராகவந்தார்கள் ஒன்றாம் வகுப்பு தமிழ் நூல் எடுத்து சொல்லி தந்தார்கள் ஆறாம்வகுப்பில்.இரவு உணவுசமைத்து சாப்பிடும் வரை எனக்கு பாடம் நடத்துவர் அவர் வீட்டில் இப்ப நான் ஒரு M.A,PGDJMCஅடுத்து அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த மதுரை மாவட்ட கழிவுகளின் கூடாரம் ஆனால் ஆசிரியர்களை குறைகூற முடியாது .தமிழ் ஆசிரியர் மணி ஐயா ,கணித ஆசிரியை மீராய்பாய் ,இயற்பியலாசிரியர் ரமணி .ஆங்கில ஆசிரியர் சண்முகசுந்தரம் இவர்கள் குருப்பிடதக்கவர்கள்

அறிமுகம்



என்ன? எழுதழம் என்று இன்னும் முடிவு பண்ண வில்லை! நல்ல தகவல்கள் தரனும் என்று மட்டும் முடிவு பண்ணிவிட்டேன்.தலைப்பிட்டு ஒரு எல்லைக்குள் என்னை அடைபட்டிக்கொள்ள விருப்பம் இல்லை

நான் பிறந்தது மதுரை மாவட்டம் சோழவந்தானில் அவ்வுரை பற்றி முதலிளில் சொல்லிவிடுகிறேன்

சோழவந்தான் பெயர் காரணம்

ஒரு முறை சோழ மன்னன் மதுரைக்கு பாண்டியமன்னனை சந்திக்க இந்த ஊர் வழியாக செல்லும் பொது, இங்கு காணப்பட்ட பசூமையை கண்டு வியந்தமையல் சோழன் வந்து உவந்தான் என்று ஆனது பின் மறுவி சோழவந்தான் ஆனதுசோழமன்னர் இங்கு இரண்டு நாள் தங்கி பின் சென்றுள்ளார்அவருடன் வந்த போர்வீரர்கள் ஆலமரத்தின் கீழ் கொட்டம் ஆமைத்து தங்கி இடம் இன்று ஆலங்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது.
பெயர் வரலாறு
இந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாண்டிய நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர்.
சோழவந்தான் வளம்

சோழவந்தான் சின்ன தஞ்சாவூர் என்று அழைக்கப்பட்டது.தஞ்சாவூர் விளைந்தால் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு.சோழவந்தான் விளைந்தால் தென் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்குதமிழகத்தின் இரணடவது மிகபெரிய கண்மாய் இன்குதான் உள்ளது.முதல் மிகபெரிய கண்மாய் இராமநாதபுரம் கண்மாய் ஆகும்.வெற்றிலை,வாழை,கரும்பு,தென்னை இந்த பகுதியில் நன்கு விளைகிறதுவெற்றிலை மும்பாய்க்கும்,கொல்கட்டவுக்கும். வாழை பெங்களுருக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் {{coor d10.0167N77.9667E}} ஆகும்கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 [[மீட்டர்]] (419 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றதுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,661 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.